தமிழ்நாடு

கஜா புயலை தொடர்ந்து மீண்டும் மழை.. 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கிறது

Published

on

தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.

தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. இன்று காலைதான் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று அறிவித்து இருந்தது.

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும் என்று அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை, தஞ்சை, சிவகங்கை, விருதுநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர், முத்துப்பேட்டையில் லேசான மழை பெய்கிறது. அதேபோல் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்கிறது. இந்த நிலையில் மழை காரணமாக பணிகள் பாதிக்கப்படும் நிலையை அடைந்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version