தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வு: தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு!

Published

on

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அது வலுபெறவும் வாய்ப்புள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மாலத்தீவு, லட்சத் தீவுகள் பகுதிகளில் வளி மண்டலத்துக்கு மேல் சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசை காற்றினாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் பற்றி தெரிவிக்க முடியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version