Connect with us

தமிழ்நாடு

இன்றுடன் முடிவுக்கு வருகிறது மழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் தகவல்

Published

on

சென்னையில் இன்றுடன் மழை முடிவடைவதாகவும், ஒரு சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் செப்டம்பர் மாதம் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக விடிய விடிய மழை பெய்தது என்பதும் இதனால் சென்னையின் தற்போதைய தட்பவெப்பநிலை ஊட்டி கொடைக்கானல் போல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னையில் இன்றுடன் முடிவடைந்தது என்றும், சிறிய இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் வால்பாறை, கூடலூர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்ரும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் போலவே கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சோளிங்கநல்லூரில் 101 மி.மீ. மழையும், சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 87 மி.மீ.மழையும் உத்தண்டியில் 65 மி.மீ. மழையும், சோளிங்கநல்லூர் அலுவலகத்தில் 62 மி.மீ. மழையும் கேளம்பாக்கத்தில் 61 மி.மீ.மழையும். வளசரவாக்கத்தில் 55 மி.மீ மழையும், அயனாவரத்தில் 53 மி.மீ.ரும் எம்ஜிஆர் நகரில் 52 மழையும் பதிவாகியிருந்தது.

அது போல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. திருக்கழுகுன்றத்திலும் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நீலகிரியில் 87 மி.மீ மழையும் கோவையில் சின்னக்கல்லூரில் 76 மி.மீ மழை பதிவாகி உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!