தமிழ்நாடு

10 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் தமிழ் நாட்டின் இதர மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூலை 8ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஜூலை 9 மற்றும் 10-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 8 முதல் 10 வரை அரபிக்கடலில் கர்நாடகா கேரளா லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அரபிக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version