தமிழ்நாடு

சென்னையின் ஒருசில இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை பெய்யாததால் சென்னை மக்கள் அனலில் தவித்தனர்.

இந்த நிலையில் சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் சென்னை தற்போது குளிர்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை முக்கிய பகுதிகளான கோயம்பேடு கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், வடபழனி, போரூர், தி.நகர், மேற்குமாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேல் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தட்ப வெப்பம் குளிர்ச்சி அடைந்துள்ளதால் கோடை வெயில் வெப்பத்தில் இருந்து தற்காலிகமாக சென்னை மக்கள் தப்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கோடையில் அவ்வப்போது கோடை மழை பெய்தால் மட்டுமே சென்னை மக்கள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இன்னும் மூன்று தினங்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version