தமிழ்நாடு

சென்னையில் விடியவிடிய இடி மின்னலுடன் மழை: மக்கள் மகிழ்ச்சி!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் நேற்று சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மயிலாப்பூர், தி நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் சென்னை தற்போது குளிர்ச்சியாக உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அதிக வெப்பம் காரணமாக பெரும் சிரமத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததால் தற்போது தட்பவெட்பநிலை குளிர்ச்சியாக உள்ளது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் மழை தொடர வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் குறிப்பாக கோவை, நீலகிரி பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version