தமிழ்நாடு

வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிப்பு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி கோவை மாவட்டங்களில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது என்பது ஒரு சில இடங்களில் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நீலகிரி, கோவை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் சென்னை உள்பட பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version