தமிழ்நாடு

11 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் கனமழை: வானிலை அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version