தமிழ்நாடு

சென்னையில் இன்னும் சில நிமிடங்களில் கொட்ட போகுது மழை!

Published

on

சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்னும் சில நிமிடங்களில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த மாவட்டங்கள் பின்வருவன: நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்னும் சில நிமிடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கோடை வெயில் இன்னும் கொடூரமாக கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்தால் பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version