தமிழ்நாடு

தமிழத்தில் விடிய விடிய மழை: இன்றும் மழை பெய்யும் என அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் பெய்யக்கூடிய மழை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்றைய வானிலை நிலவரப்படி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, எழும்பூர், தி நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் இன்று காலை சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பகலிலும், மாலை வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதாகவும் அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டம் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version