தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் மழை: ஜாவத் புயல் காரணமா?
சென்னையில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் சென்னை அருகே உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டன என்பதும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னையில் மழை நின்று இருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் மழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் சென்னை மழைக்கு ஜாவத் புயல் காரணமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.