தமிழ்நாடு
3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதன்படி இன்று இன்னும் சில மணி நேரத்தில் அதாவது மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருமாறு:
நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.