தமிழ்நாடு

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published

on

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீராதாரங்கள் நிரம்பி உள்ளதால் இந்த ஆண்டு குடிநீர் கஷ்டம் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version