தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய இயக்குனர் பேட்டி!

Published

on

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார். தமிழக மழை நிலவரம் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டார்.

அதில், தமிழகத்தில் அதிகமாக புதுக்கோட்டை மீமிசலில் 13 செமீ மழை பெய்துள்ளது. தற்போது வங்கடலில் நிலவும் காற்றழுத்தம் புயலாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும்.

இந்த மண்டலம் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயல் ஓமன் கரையை நோக்கி நகரும். இந்த சமயத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version