தமிழ்நாடு
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும். இதனால் தொடர்ந்து மழை பெய்யும். வட தமிழகத்தில் மேற்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான், பகலில் இவ்வளவு மழை பெய்துள்ளது. இந்த மழை பொழிவு தொடரும் என கூறியுள்ளார் பிரபல வானிலையாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். மீனவர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளார் இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் புவியரசன்.