தமிழ்நாடு

சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: மீண்டும் கனமழையா?

Published

on

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையொட்டி மஞ்சள் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் மிக கனமழை பெய்தது என்பதும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி பிறந்ததிலிருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதியில் நிலவும் குளிர் மற்றும் ஈரப்பதம் உள்ள காற்றின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்றும் நாளையும் தமிழக மற்றும் ஆந்திர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என கூறப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகம் ஆந்திராவில் இன்று முதல் அதிக மழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் எனவே சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் மழை பெய்யும் மாவட்டங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்திய பகுதிகளில் இருந்தும் கிழக்கு பகுதிகளில் இருந்தும் வீசும் குளிர் காற்றால் குறைந்த காற்றழுத்தம் உருவாகி மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version