இந்தியா

தண்டவாளத்தில் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு கிடைத்த மாபெரும் மரியாதை!

Published

on

மும்பையில் உள்ள வாங்கணி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவருடன் வந்து கொண்டிருந்த குழந்தை ரயில்வே டிராக்கில் விழுந்தது.

அந்த நேரம் ரயில் மிக அருகில் வந்து விட்டதை அறிந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து அந்த குழந்தையை காப்பாற்றி கடைசி நொடியில் தன்னையும் காப்பாற்றிக் கொண்டார்.

இதுகுறித்த சிசிடிவி காட்சி நேற்று இணையதளங்களில் வைரலாகியது என்பதும் குழந்தையை காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று அவர் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தபோது அவருடைய சக அலுவலர்களும் மேலதிகாரிகளும் அவரை கைதட்டி வரவேற்றனர். அவருக்கு கொடுத்த இந்த மாபெரும் மரியாதை குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/rananth/status/1384127046012391428

author avatar
seithichurul

Trending

Exit mobile version