தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பெரும் பரபரப்பு!

Published

on

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அமைச்சர் சிலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி. முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர். முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி உள்பட ஒரு சிலரின் வீடுகளில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016-2021ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது புகார் எழுந்துள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் தங்கமணிக்கு சொந்தமான சென்னை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version