உலகம்

மோடி செய்த 2 தவறான விஷயம்.. மிக பெரிய காரணம்.. ராகுலின் பரபர டிவிட்!

Published

on

டெல்லி: ரபேல் ஊழலால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தை விடாப்பிடியாக பிடித்துள்ளார். ரபேல் ஊழல் குறித்து நாளுக்கு நாள் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பிரதமர் மோடிதான் கட்டாய விடுப்பில் அனுப்பினார். அக்டோபர் 23ம் தேதி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இடையே நிலவிய பிரச்சனையை அடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல மோடி உத்தரவிட்டார். அதிகாலை 2 மணிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா, ரபேல் ஊழல் குறித்து விசாரிக்க மிகவும் தீவிரம் காட்டினார். அப்போது இதுகுறித்து அலோக் வெர்மா இரண்டு முறை ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்துதான் அலோக் வெர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்த விசாரணையை தடுக்கவே மோடி இப்படி செய்தார் என்று கூறப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version