கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்.. எப்படி தெரியுமா? டிராவிட்டின் ஆருடம்!

Published

on

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கணித்து இருக்கிறார்.

இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து கோட்டைவிட்டது. இதனால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

புவனேஷ்வர்குமார் இல்லாமல் இந்திய அணி கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும் இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று கோஹ்லி படை சபதம் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தொடரை இந்தியா வெல்லும்.. டிராவிட்டின் ஆருடம்!

இங்கிலாந்து தொடரை இந்தியா வெல்லும்.. டிராவிட்டின் ஆருடம்!

இந்திய நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கணக்கில் கைப்பற்றும் ராகுல் டிராவிட் கணித்து இருக்கிறார். அதற்கு அவர் நான்கு காரணங்கள் சொல்லி இருக்கிறார்.

1. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் இந்தியாவிற்கு அதிகம் உதவுவார்கள். முக்கியமாக இங்கு பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் என்பதால் இந்தியாவிற்கு உதவியாக இருக்கும். உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா ஆகியோர் அதிக விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.

2. கடைசி நேரத்தில் ஸ்பின்னர்கள் கை கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். முக்கியமாக குல்தீப் யாதவும், அனுபவம் பொருந்திய அஸ்வினும் சாதிக்க வாய்ப்புள்ளது.

3. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டிய பெரிய அளவில் உதவுவார் என்று அவரை தனியாக குறிப்பிட்டுள்ளார் ராகுல் டிராவிட்.

4. முன்பு டெஸ்ட் வீரராக இருந்து இப்போது ஒருநாள், டி20 போட்டியில் ஜொலிக்கும் கே.எல் ராகுல் போட்டியை மாற்றும் வல்லமை கொண்டவர் என்றுள்ளார்.

Trending

Exit mobile version