உலகம்

கலக்கல் பாஸ்.. சிறப்பாக பேசிய ராகுல் காந்தி.. அதிர்ந்து போன பாஜக!

Published

on

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ”பப்பு பப்பு” என்று கூறி பாஜக தனி மனித தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் அனைத்திற்கும் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பதில் அளித்து வருகிறார் ராகுல் காந்தி.

சென்ற வருடம் நடந்த பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது ராகுல் காந்தி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் பேசிவிட்டு பின் பிரதமர் மோடியை சென்று கட்டிபிடித்ததும், தனது கட்சியினரை பார்த்து கண் அடித்ததும் மிகப்பெரிய வைரலானது. அதேபோல்தான் நேற்று ராகுல் பேசியதும் மிக முக்கியமான பேச்சாக மாறியுள்ளது.

நேற்று ராகுல் காந்தி ரபேல் ஊழல் குறித்து பேசிய போது, ராகுல் மீண்டும் பழைய விஷயங்களை பேசுவார் என்றுதான் பாஜகவினர் நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோவா முதல்வர் மனோகர் பார்க்கரின் ஆடியோ குறித்து ராகுல் பேசினார். ரபேல் ஒப்பந்தம் குறித்து மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோவை வைத்து ராகுல் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

seithichurul

Trending

Exit mobile version