தமிழ்நாடு

திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் வருகை! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!!

Published

on

ராகுல் காந்தி வருகை

திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல்  தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக, காங்கிரஸ் தலைவர்களும் அதிமுகவுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை முன்வைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த வாரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அவருடன் திமுக உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) இரண்டாம் கட்டமாக திருப்பூரில் ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவையில் சில நிகழ்ச்சிகளை முடித்தப் பின் மாலை 3.30 மணியளவில் அவினாசி வருகிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு அனுப்பர்பாளையத்திலும், மாலை 5 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ராகுல்காந்தி திருப்பூர் வருவதையொட்டி நேற்று காலை மத்திய பாதுகாப்பு படை போலீஸ் துணை கமாண்டன்ட் கணேஷ் பிரதாப் சிங் தலைமையிலான குழுவினர் மேற்கண்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.  பிரச்சார மேடை, ராகுல் வரும் பாதை என கள ஆய்வு செய்தனர்.  இதற்காக 16 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் ராகுலுக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

Trending

Exit mobile version