இந்தியா

அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது: ராகுல்காந்தி பரபரப்பு டுவீட்!

Published

on

ஒட்டுமொத்த நாடுமே நாளைய தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 17-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது.

பாஜக தலைமையில் ஆட்சி அமையுமா அல்லது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையுமா அல்லது மாநில கட்சிகளின் தயவோடு கூட்டணி ஆட்சி அமையுமா என பல்வேறு யூகங்கள் இந்த தேர்தலில் உலா வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளுக்கு நாளைய தினம் முக்கியமான ஒரு தினமாக உள்ளது.

பாஜக, காங்கிரஸ் என இரு முக்கிய தேசிய கட்சிகள் பல்வேறு யூகங்களை வகுத்து ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் காய்நகர்த்தல்களை கச்சிதமாக நடத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது டுவிட்டர் மூலமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் உஷாராகவும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்பு பிரசாரத்தினால் மனம் உடையாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடினமான உழைப்பு வீண் போகாது என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version