இந்தியா

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் அறிவிப்பு

Published

on

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு லேசான கொரனோ தொற்றின் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக பரிசோதனை செய்து கொண்டு இருக்கவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் தமிழ்நாடு, புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்ததை அடுத்து ராகுல்காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்தார் என்பதும் சமீபத்தில் மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை அவர் ரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version