தமிழ்நாடு

‘இந்த முறை நடப்பது இரு கட்சிகளுக்கு இடையிலான போர் அல்ல…’- அதிமுகவை கிழித்த ராகுல் காந்தி!!!

Published

on

சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ராகுல் கூறியதாவது:-

தமிழகத்தில் இப்போது நடப்பது இரு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. தமிழகத்தில் இதுவரை நாம் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். அனைத்துத் தேர்தல்களும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக இருந்திருக்கும். ஆனால் இது அப்படி அல்ல.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வரலாற்றின் மீது தாக்குதலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் பண்பாடு தாக்குதல் என்பது இந்தியா மீது தாக்குதல் என்றே பார்க்கிறேன். தமிழகத்தை மதிக்காத இந்தியா என்பது இந்தியாவாக இருக்க முடியாது. ஒற்றைச் சிந்தனைக்குள் இந்தியாவை தள்ளி விடுவது இந்தியா கிடையாது.

கொரோனா காலத்தில் நாம் எல்லாம் முகக்கவசம் அணிந்துள்ளோம். அதிமுகவும் முகக்கவசம் ஒன்றை அணிந்துள்ளது. வெளிப்படையாக பார்த்தால் அது அதிமுகவைப் போல தோற்றமளிக்கும். ஆனால் அந்த முகக்கவசத்தை அவிழ்த்துவிட்டுப் பார்த்தால் உள்ளே இருப்பது பாஜக – ஆர்.எஸ்.எஸ் என்பது நமக்குப் புரிந்துவிடும். இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version