இந்தியா

நிலநடுக்கத்தையும் பொருட்படுத்தாத ராகுல்… தொடர்ந்து மாணவர்களிடம் உரையாடிய வைரல் வீடியோ

Published

on

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சமீபத்தில் மாணவர்களுடன் வீடியோ மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது மிதமான நிலநடுக்கம் ஏற்பட அதன் மத்தியிலும் ராகுல் தொடர்ந்து பேசியது வைரல் ஆகி வருகிறது.

ராகுல் காந்தி சமீபத்தில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் லைவ் ஆக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் ராகுல் காந்தி வீடியோ உரையாற்றிக் கொண்டிருந்த அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் ஆடியுள்ளன.

அப்போது வீடியோ உரையின் நடுவே ராகுல் தனது அறை நிலநடுக்கத்தால் அதிர்வதாகவும் அதைத் தன்னால் உணர முடிவதாகவும் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து எவ்வித மிரட்சியும் இல்லாமல் தொடர்ந்து தனது உரையை மேற்கொண்டார். இந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியது ஒரு புறம் வைரல் ஆனாலும் நிலநடுக்கக் காட்சியும் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version