இந்தியா

பிரதமர் மோடி ஒரு கோழை: சவால் விடும் ராகுல் காந்தி!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி ஒரே மேடையில் ஐந்து நிமிடம் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய வருவாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்து மோடியை கோழை எனவும் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமாக பேசி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடி நீங்கள் 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர்கள் என்று கூறுகிறீர்கள். தேசப் பாதுகாப்பு மற்றும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ஐந்து நிமிடங்களுக்கு விவாதிக்கலாம். உங்களுக்குச் சவால் விடுகிறேன். என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடி என்னுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய வருவாரா? பிஜேபிக்குச் சவால் விடுகிறேன். அவருக்குப் பயம் இருக்கிறது. மோடி ஒரு கோழை என ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மோடியிடம் யாராவது எழுந்து நின்று கேள்வி கேட்டால் உடனடியாக ஓடி விடுவார். அவர் முகத்தில் பயம் அதிகமாக உள்ளது. மக்களைப் பிரிப்பதன் மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது என்பதை இப்போது அறிந்திருப்பார். நரேந்திர மோடியின் படம் முடிந்துவிட்டது என்று கடுமையாக தாக்கி பேசினார்.

Trending

Exit mobile version