இந்தியா
தமிழர்களை மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்: கோவையில் ராகுல்காந்தி பரப்புரை.!!!
பிரதமர் மோடி தமிழர்களை இரண்டாம் தர மக்களாக தான் பார்க்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘எனக்கு தமிழகம் வருவது எப்போது பெருமையாக இருக்கும். இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தொழில்துறையில் முன்னோடியாக உள்ளது.
இந்தியா என்பது பல மொழி, பல கலாச்சாரம், வாழ்க்கை முறையை உள்ளடக்கியது. ஆனால், தற்போது ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற முயற்சியை மத்திய அரசு எடுக்கிறது. அந்த முயற்சியை எடுத்து நாம் போராட வேண்டும். தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாகவே பார்க்கிறார்.
எல்லா துறைகளிலும் பெருமை பெற்ற தமிழ்நாடு தற்போது அந்த பெருமைகளை இழந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. புதிதாக தொழில் முனைவோர், மாணவர்கள், இளைஞர்கள், விவாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அவர்களுக்கு அடிமைகளாக மக்களை மாற்ற விரும்புகிறார்’
இவ்வாறு ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.