இந்தியா

மோடியின் உச்சகட்ட தேச விரோத செயல்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு!

Published

on

காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சியாக மாறிவருவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கண்ணூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தேசத்தை தாக்கிய சக்திகளை எதிர்த்து போராடிய வரலாறுதான் காங்கிரஸ் கட்சியின் வரலாறு. அத்தகைய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் பணியாளர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இன்று நாட்டை பிரித்து வரும் மோடியின் செயல்பாடுகள்தான் உச்சகட்ட தேச விரோத செயல்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வேளாண் அமைப்பை முடக்கியது, விவசாயிகள் தற்கொலைக்கு வழிவகை செய்தது மோடியின் தேச விரோத செயல்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தது மோடியின் தேச விரோத செயல். மோடி அனைத்திலும் தோல்வியடைந்துவிட்டார். தற்போது அவர் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்திய பொருளாதாரத்தின் சீரழிவு, மோடியின் ஊழல், விவசாயிகளின் அவல நிலை போன்றவைதான் இந்த தேர்தலின் மையமாக உள்ள முக்கிய பிரச்சினைகளாகும். அடுத்த அரசை அமைப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கேரள, ஒடிசா, டெல்லி ஊடகங்களை மோடி சந்திக்க தைரியமில்லாமல் போனது ஏன்? என கடுமையாக தாக்கி பேசினார் ராகுல் காந்தி.

seithichurul

Trending

Exit mobile version