Connect with us

இந்தியா

பாஜகவும், ஆர்எஸ்எஸும் என்னை மிரட்டுகிறது: ராகுல் காந்தி பாய்ச்சல்!

Published

on

பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடுமையான விரக்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு தானே பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக கட்சிக்கு மாற்று தலைமையை தேர்ந்தெடுங்கள் என தொடர்ந்து அழுத்தமும் கொடுத்து வருகிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் ராகுல் காந்தி தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என ராகுல் காந்தி பேசியதற்காக அவர் மீது மும்பை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது நீதிமன்றம்.

இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு அவதூறு வழக்கில் ஆஜராகிறார். அனைத்து திருடர்களின் பெயருக்கு பின்னாலும் மோடி என்று ஏன் பெயரிடப்பட்டிருக்கிறது என்று ராகுல் பேசியதற்கு எதிராக அவர் மீது பாட்னா நீதிமன்றத்தில் பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வழக்குத் தொடர்ந்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, என்னை இடையூறு செய்வதற்கும், மிரட்டுவதற்காகவும், துன்புறுத்துவதற்காகவும் ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் வழக்குகள் போடுகின்றன. மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். வாய்மையே வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!