இந்தியா

காங்கிரஸின் உண்மையான சக்தி எது தெரியுமா?- சொல்கிறார் ராகுல் காந்தி

Published

on

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், கேரளா வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, காங்கிரஸின் உண்மையான சக்தி எது என்பது குறித்துப் பேசியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் டெல்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் ராகுல் காந்தி,  ‘காங்கிரஸின் தொண்டா்கள்தான் கட்சியின் உண்மையான சக்தி. இளைஞா் காங்கிரஸ் சிறந்த வகையில் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது. நாடு முழுவதும் கட்சியின் கொள்கைகளுக்காகப் போராடி வருகின்றனா்.

இதற்காக இந்த அமைப்பின் நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது நம்பிக்கையின் அா்த்தம் என மகாத்மா காந்தி கூறுவது வழக்கம். இன்றைக்கு நாட்டுக்கு இதுபோன்ற நம்பிக்கை தேவைப்படுகிறது. நாட்டில் உள்ள சுரண்டப்படும், நலிவுற்ற பிரிவினருக்கு நாம் அனைவரும் குரல் கொடுப்பது கடைமையாகும். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிா்த்து இளைஞா் காங்கிரஸ் குரல் கொடுக்கும்’ என்றாா்.

Trending

Exit mobile version