தமிழ்நாடு

மாபெரும் பொதுக்கூட்டம்… இன்று ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம்!

Published

on

சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நடக்கும் இந்தக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக, காங்கிரஸை தவிர, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவைகளும் கலந்து கொள்கின்றன. இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலினைத் தவிர வைகோ, தொல்.திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன், வேல்முருகன் உள்ளிட்டோரும் உரை நிகழ்த்த உள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஞாயிற்றுக் கிழமையுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் முடிவுகளும் அறிவிக்கப்பட இருக்கின்றன. இன்னும் ஒரு வாரமே தேர்தல் பிரச்சாரம் மீதம் உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர்.

இன்னும் ஒரு சில நாட்களில் தாராபுரம் தொகுதியில் பிரதமர் மோடி, நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் நாட்களில் தேசிய முக்கியப் புள்ளிகள் தமிழகத்தில் முகாமிட உள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version