தமிழ்நாடு
ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக: பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்!
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் வெண்கல சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அப்போது தற்போது மத்தியில் நடந்து வரும் ஆட்சியையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத மோடி ஒரு ஆறுதல் வார்த்தையை கூட இதுவரை தெரிவிக்கவில்லை. கொடூர மனப்பான்மை கொண்ட மோடியை வீழ்த்த வேண்டும் என கூறிய ஸ்டாலின், இந்த மேடையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று கூறி, ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என மேடையில் இருந்த தலைவர்களிடம் வலியுறுத்தினார்.