தமிழ்நாடு

நெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்!

Published

on

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை நெல்லை வந்த ராகுல் காந்தி நெல்லையப்பர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த சாலையோர கடையில் டீ குடித்தார். மேலும் டீயை குடித்து முடித்தவுடன் ரொம்ப நல்ல டீ என்றும், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த டீ என்று ராகுல்காந்தி அந்த டீக்கடைக்காரரை புகழ்ந்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தியை போகவே மக்களிடம் மிக நெருக்கமாக பழகி வருவதும், பொதுமக்களில் ஒருவராக சகஜமாக இருப்பதும் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version