தமிழ்நாடு
மாஸ்க் அணியாத இளைஞரை தாக்கிய போலீஸ்; ராகுல் காந்தி கண்டனம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மாஸ்க் அணியாமல் இளைஞர் ஒருவர் வெளியே வந்ததை அடுத்து அவரை இரண்டு காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாஸ்க் அணியாமல் வெளியே வந்த இளைஞரை கடுமையானதாக போலீசார் தாக்கியது வெட்கக்கேடான செயல் என்றும் இதனை நாடு ஏற்காது என்றும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு போலீசாரே சித்திரவதை செய்ததால் பொதுமக்கள் எங்கு செல்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞரை காவலர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இளைஞரை தாக்கிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.