இந்தியா

வயநாடு, அமேதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி வயநாடு மட்டுமில்லாமல் உத்திர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணியை எதிர்த்தும் போட்டியிட உள்ளார்.

கேரளாவில் ஏப்ரல் 11 மற்றும் மே 19 என இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. விரைவில் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம் தேர்தல் தோல்வி பயம் என்ற காரணத்தினால் தான் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு பகுதியில் போட்டியிடுகிறார் என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

கேரளாவில் இடது சாரிகளும் பாஜவுடன் போட்டி போடாமல் ராகுல் காந்தி எங்களுடன் போட்டிப்போடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version