இந்தியா
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி தர்ணா- நாடாளுமன்றத்தில் குவிந்த காங்கிரஸார்
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி இதர காங்கிரஸ் எம்.பி-க்கள் மற்றும் கட்சியினர், ஆதரவாளர்கள் உடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரினார்.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் வேளாண் சட்டத்துக்கு எதிராகத் தற்போது மீண்டும் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். அரசு தொடர்ந்து எவ்வித ஆதரவு பதிலையும் தெரிவிக்காததால் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாடாளுமன்ற எதிர்கட்சிகளின் எம்.பி-க்கள் பலரும் அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.
वे असत्य, अन्याय, अहंकार पर अड़े हैं,
हम सत्याग्रही, निर्भय, एकजुट यहाँ खड़े हैं।जय किसान!#FarmersParliament pic.twitter.com/y9xGdvgT3T
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2021