இந்தியா

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கோபம் கொப்பளிக்க பேசிய ராகுல் காந்தி!

Published

on

மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்யாததால் காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி திட்டியதாக தகவல்கள் வருகின்றன.

தேர்தல் தோல்வி காரணமாக அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக நேற்று மும்பை நீதிமன்றத்துக்கு வந்தார். அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது எல்லாரும் எங்கு போனீங்க, இப்படி இருந்தால் கட்சி எப்படி வளர்ச்சி அடையும் என பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், மக்கள் மழையால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு களத்தில் சென்று உதவ வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டிங்களா என மிக கோபமாக பேசியதாகவும், கட்சியை வளர்க்க ஆக்கபூர்வமான செயல்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version