இந்தியா

‘இந்தா வச்சிக்கோ!’- புரூஸ் லீ போல ஒற்றைக் கையில் புஷ்-அப் எடுத்து மிரளவைத்த ராகுல்- வைரல் வீடியோ

Published

on

தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினார். 

அந்த வகையில் அவர் இன்று பேசியுள்ளதாவது:

நிதிச் சுமை, ஆள் பற்றாக்குறை என்று பல்வேறு அதிகாரிகள் எதிர்த்த போதும், குழந்தைகளின் கல்விதான் முக்கியம் என்று விடாப்பிடியாக நின்று, சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர் காமராஜர். 

தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த காரணம் கொண்டும் நாம் வழிவிட்டுவிட கூடாது. தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பது ஒரு இந்தியனாக எனது கடமை. இவ்வாறு ராகுல் பேசினார். 

தொடர் சுற்றுப் பயணத்தால் களைப்படைந்த ராகுல், ஓர் இடத்தில் பன நுங்கு விற்பதைப் பார்த்து நின்றுள்ளார். திடீரென்று அவர் இறங்கி மக்களோடு மக்களாக நுங்குவை ரசித்துச் சாப்பிட்டார். அது குறித்தான வீடியோ:

அதேபோல கன்னியாகுமரியில் இருக்கும் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுலை, மாணவர்கள் சிலர் ‘உங்களால் புஷ்-அப்’ எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு ராகுல், ‘தாராளமாக’ என்றுள்ளார். 

ராகுலுடன் புஷ்-அப் எடுக்க வந்த மாணவி, ‘வாங்க முதலில் 15 புஷ்-அப்களை எடுப்போம்’ என்று சவால் விட்டுள்ளார். ராகுல் மாணவியை முந்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பாடி-பில்டர் போல புஷ்-அப்களை எடுத்து முடித்தார். தொடர்ந்து அவர் ஒற்றைக் கையில் புரூஸ் லீ போலவும் புஷ்-அப் எடுத்துக் காட்டி அசத்தினார். 

அது குறித்த வைரல் வீடியோ:

seithichurul

Trending

Exit mobile version