இந்தியா

மோடிக்கு ராகுல் சவால்: 15 நிமிடம் என் கேள்விக்கு பதிலளிக்கு முடியுமா?

Published

on

ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதம் செய்து என் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று அம்பிகாபுரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ரஃபேல் விமான பேரம் குறித்து என்னை 15 நிமிடங்களுக்கு மட்டும் பேச அனுமதித்து, மோடி பதில் அளிப்பாரா. எங்கே, எந்த இடம் என்பதையெல்லாம் அவரே தீர்மானிக்கட்டும். இந்த விவாதத்தின்போது, அனில் அம்பானி, பிரான்ஸ் அதிபர், ஹெச்ஏஎல் போன்ற சிறிய கேள்விகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும். அதற்கு அவர் தயாரா, எனது கேள்விகளுக்குப் பிரதமர் மோடியால் பதில் அளிக்க முடியாது என்றார்.

Trending

Exit mobile version