தமிழ்நாடு

பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி – முக ஸ்டாலின்!

Published

on

மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தேசிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி சேலத்தில் திமுக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த மேடையில் திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொகிதீன், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியின் தலைவர்களும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதுநாள்வரை காங்கிரஸ் மற்றும் திமுக தனித்தனியாக பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரே மேடையில் காங்கிரஸ் திமுக தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சியின் ஒட்டுமொத்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முதல்வரின் மாவட்டத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவத்தை பெறுகிறது.

seithichurul

Trending

Exit mobile version