சினிமா செய்திகள்

’ஜெய்பீம்’ நிஜ நாயகிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தரும் பிரபல நடிகர்!

Published

on

’ஜெய்பீம்’ திரைப்படத்தின் நிஜ நாயகிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக பிரபல நடிகர் இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

’ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதும் இந்த படம் போலீசாரால் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணு என்பவரின் உண்மை கதை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் இன்றும் உயிருடன் இருக்கும் நிலையில் அவரை பல பத்திரிகை பிரபலங்கள் பேட்டி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஒரு ஊடகத்தின் பேட்டியின் மூலம் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதை அறிந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் பார்வதி அம்மாளுக்கு உதவ முன் வந்துள்ளார்.3

பார்வதி அம்மாள் அவர்களின் தற்போதைய நிலையை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் அவருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுப்பதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 28 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொடூர நிகழ்வை இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாக்கிய ’ஜெய்பீம்’ படக்குழுவினருக்கும் ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா மற்றும் ஜோதிகா, படத்தை இயக்கிய ஞானவேல் ஆகியோருக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் என்றும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version