இந்தியா
ரபேலில் முறைகேடு நடக்கவில்லை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. பாஜகவிற்கு பெரும் நிம்மதி!
டெல்லி: பாஜகவை கடந்த 1 வருடமாக ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்த ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் இருந்து தற்போது பாஜகவிற்கு பெரிய நிம்மதி கிடைத்து இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய பாஜக அரசு ஊழல் செய்து இருக்கிறது. பாஜக செய்த முறைகேடான ஒப்பந்தம் காரணமாக 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து.
இது தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு ஒருமாதத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் , ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவைில்லை, இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.