உலகம்

மோடி ஒரு இடைத்தரகர்.. ரபேலில் ஆதாரங்களை அடுக்கும் ராகுல்!

Published

on

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு கிரிமினல் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ரபேல் ஒப்பந்த ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இந்த ஊழல் தொடர்பாக புதிய ஆவணங்களை வெளியிட்டு, பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை இன்று அடுக்கினார்.

ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இந்த முறை சிஏஜி அறிக்கை தொடங்கி அனில் அம்பானி வரை பல விஷயங்கள் குறித்து ராகுல் பேசினார்.

ராகுல் தனது பேட்டியில், ரபேலில் பிரதமர் மோடி இடைத்தரகராக செயல்பட்டு இருக்கிறார். அனில் அம்பானிக்காக மோடி சட்டங்களை வளைத்து இருக்கிறார். அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் நடந்தது எப்படி தெரியும்?. ஒரு ராணுவ ஒப்பந்தம் யார் சொல்லி அனில் அம்பானிக்கு தெரிந்தது.

ரபேல் பற்றிய சிஏஜி அறிக்கை ஒரு திருட்டு அறிக்கை. திருடருக்கு திருடர் செய்த திருட்டு அறிக்கைதான் இந்த சிஏஜி அறிக்கை. இது உச்ச நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகும். இது மோடி அவராகவே உட்கார்ந்து எழுதிய அறிக்கை.

ரபேல் திருட்டுக்கு மோடிதான் முழு பொறுப்பு. அவர் ஒரு உளவாளி போல செயல்பட்டு ராணுவ ரகசியத்தை அனில் அம்பானியிடம் கொடுத்து இருக்கிறார்.ரபேல் ஒப்பந்தம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே அனில் அம்பானிக்கு தெரிந்து இருக்கிறது. இதுகுறித்து அம்பானி பிரான்ஸ் அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version