சினிமா செய்திகள்

‘சின்னத்திரையில் இருந்து விலகுகிறேன்…’- ராதிகா சரத்குமார் அதிரடி அறிவிப்பு

Published

on

நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரையில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக முழுவதுமாய் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார் தனது ராடன் மீடியா மூலம் பல ஆண்டுகளாக சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதும் சீரியல்கள் தயாரிப்பதும் என பிஸியாக இருந்து வருகிறது. பல திரைப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த சூழலில் ராதிகா சின்னத்திரையில் நடிப்பதில் இருந்து முழுவதுமாய் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது சித்தி-2 சீரியலில் பிஸியாக இருக்கும் ராதிகா விரைவில் இந்த சீரியலில் இருந்து விலகுவார் எனத் தெரிகிறது. கணவரும் நடிகருமான சரத்குமார் உடன் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக ராதிகா அறிவித்துள்ளார். சரத்குமார் தற்போது அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியில் தலைவர் ஆக செயல்பட்டு வருகிறார்.

வருகிற சட்டமன்ற தேர்தலின் முதல் ராதிகா தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. சமுத்துவ மக்கள் கட்சி வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதைப் பொறுத்தும் ராதிகாவின் அரசியல் பயணம் இருக்கும் என விமர்சிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version