தமிழ்நாடு
சென்னையில் போட்டியிடுகிறார் ராதிகா: அதிகாரபூர்வமாக தொகுதி அறிவிப்பு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக ராதிகா சரத்குமார் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தூத்துக்குடியில் கூடியது. இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக மீண்டும் சரத்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாநில துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ராதிகா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் ராதிகா சரத்குமார் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேளச்சேரியில் கட்சியின் தொண்டர்கள் ராதிகாவுக்கு பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் சரத்குமார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமார் கட்சி, கூட்டணி குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பேசுவதற்கு முன்பே என் ராதிகாவின் தொகுதியை மட்டும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.