டிவி

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

Published

on

விஜய் டிவியின் டாப் சீரியலில் முக்கியமானது பாக்கியலட்சுமி. கடந்த சில வரங்களாக கணேஷ், அமிர்தாவைக் கடத்துவது அவர்களைக் காப்பாற்றுவது என சீரியல் போரடிக்க, எப்போதுடா, கோபி ராதிகா பிரச்சனை வெடிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது இந்த வாரம்.

ஆமாம், இந்த வாரம் கோபியின் அலுவலகம் செல்லும் ராதிகா, என்ன அலுவலகம் பூட்டியுள்ளது என அருகிலிருந்த நபரைக் கேட்க, கோபியின் அலுவலகம் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே மூடப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்கிறார்.

உடனே கோபிக்கு போன் செய்யும் ராதிகா, எங்கு இருக்கிறீர்கள் எனக் கேட்க, தான் அலுவலகத்தில் இருப்பதாகக் கோபி சமாளிக்கிறார். மூடிய அலுவலகத்தில் எப்படி இருக்கிறீர்கள் எனக் கொதிக்கும் ராதிகா மிக கோவமாக வீட்டிற்குச் செல்கிறார்.

அங்கு, ராதிகாவிடம் கெஞ்சியபடியே வீட்டிற்குள் செல்லும் கோபியைப் பார்த்துக் கோபப்படும் அம்மா ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டைக்குச் செல்ல, தன் மகனைப் போன்ற நல்லவன் இருக்க முடியாது எனக் கூற, அவர் அலுவலகம் இழுத்து மூடப்பட்டது உங்களுக்குத் தெரியுமா எனக் கேட்க, அவர்களது குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கேனேஷ் எபிசோடுகள் வந்தாலே ரசிகர்கள் கடுப்பாகி வரும் நிலையில், மீண்டும் இந்த வாரம் முதல் பாக்கியலட்சுமி சீரியல் கதை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarasu

Trending

Exit mobile version