சினிமா

விக்ரம் பட இயக்குநர் மீது ராதிகா ஆப்தே பாலியல் புகார்

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே முழு நிர்வாணமாக படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் பட நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னர் கூறிய ராதிகா ஆப்தே, இன்று வரை அவரது பெயரை கூறவில்லை.

இந்நிலையில், விக்ரமை வைத்து பீரியட் படம் இயக்கப்போவதாக ஒரு இயக்குநர் தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து ஒரு கோட் மட்டும் கொடுத்து அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்ததாகவும், பின்னர் ஆபாசமாக நடனமாட சொன்னதாகவும் கூறியுள்ளார். எனக்கு அந்த இடம் சரியானதாக தோன்றாத காரணத்தால், காலையில் ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி அங்கிருந்து தப்பித்து வந்தேன் என ராதிகா ஆப்தே கூறியுள்ளார். இப்போதும் அந்த இயக்குநர் யார் என்று பெயரை கூறவில்லை.

விக்ரமை வைத்து கரிகாலன் எனும் பீரியட் படத்தை இயக்க முடிவு செய்த இயக்குநர் கண்ணனை தான் ராதிகா கூறியுள்ளாரா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. கரிகாலன் படம் டிராப் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version