சினிமா
அதிகமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பை இழந்தேன்: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!
![Radhika Apte - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Radhika-Apte.jpg)
ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே எக்கச்சக்கமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு ஒன்றை இழந்ததாக தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தே ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ராதிகா ஆப்தே கடந்த வருடம் நடித்து வெளியான அந்தாதூன் திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டியது. இவர் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தேயின் சிறப்பே அவர் தனது உடல் எடையை சரியாக மெய்ண்டெய்ன் செய்வதே ஆகும். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. எப்படி உணவு கட்டுப்பாட்டி இருக்கிறீர்கள் என்று. இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த விக்கி டோனார் என்ற படத்திற்கு முதலில் நடிகையாக நான் தான் நடிக்க இருந்தேன்.
ஆனால் வெளிநாட்டிற்கு சென்றபோது எக்கச்சக்கமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் என் உடல் எடையை பார்த்த இயக்குநர் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார். நான் என் உடல் எடையை குறைத்து விடுகிறேன் என்று கூறியும் அவர் என் பேச்சை கேட்காமல் படத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதன் பின்னர் உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருக்கிறேன் என்றார்.