சினிமா செய்திகள்

என் அம்மாவ பத்தியா தப்பா சொல்ற? பயில்வான் ரங்கநாதனை வச்சு செஞ்ச ராதிகா!

Published

on

தனது தாயாரைப் பற்றி அவதூறாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதனை பொது இடத்தில் நடிகை ராதிகா வச்சு செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் இணைய தளங்களில் நடிகர் நடிகைகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகிறார் என்பதும் ஒரு சில தகவல்கள் மிகைப்படுத்தி இருப்பதாக கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிகை ராதிகா குறித்தும், அவரது தாயார் குறித்து அவதூறாக சில கருத்துக்களை தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோது நடிகர் பயில்வான் ரங்கநாதனை, ராதிகா சந்தித்ததாகவும் அப்போது தனது தாயாரைப் பற்றி அவதூராக ஏன் அப்படி கூறினாய்? என்று சண்டை போட்டதாகவும் பதிலுக்கு பயில்வான் ரங்கநாதன் ராதிகாவை விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளதாகவும் இருவருக்குமிடையே கடுமையான வார்த்தைகளுடன் கூடிய சண்டை வந்தாலும் இருவரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து நடிகை ராதிகாவுக்கு கண்டனம் தெரிவித்து சினிமா பத்திரிகையாளர் ஒரு அறிக்கை வெளியிட. அதற்கு விளக்கம் அளித்து நடிகை ராதிகா நடந்ததை கூறியதாகவும், தன்னை மட்டுமின்றி பல நடிகைகளை பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதனை நாகரீகம் கருதி அடிக்காமல் விட்டதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ச்சியாக நடிகர் நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசி வரும் நிலையில் அவரை கட்டுப்படுத்துவதற்கு பூனைக்கு மணி கட்டி உள்ளதாக ராதிகாவுக்கு ஒருபக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version